Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோதையாறு ஆணையிலிருந்து 30 நாட்கள் தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

கோதையாறு ஆணையிலிருந்து 30 நாட்கள் தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

By: Monisha Thu, 09 July 2020 6:07:30 PM

கோதையாறு ஆணையிலிருந்து 30 நாட்கள் தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

குடிநீர் மற்றும் பாசனத்திற்காக கோதையாறு ஆணையிலிருந்து தண்ணீர் திறப்பது தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு பாசனத் திட்ட அணைகளிலிருந்து திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டத்திற்கு குடிநீர் மற்றும் பாசனத்திற்காக, இராதாபுரம் கால்வாய்க்கு தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று, கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு பாசனத்திட்ட அணைகளிலிருந்து திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டத்திற்கு குடிநீர் மற்றும் பாசனத்திற்கு 15.7.2020 முதல் 13.8.2020 வரை 30 நாட்களுக்கு, விநாடிக்கு 75 கன அடி வீதம், 194.40 மி.க.அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட உத்தரவிடப்பட்டுள்ளது.

gothaiyar dam,water,edappadi palanisamy,drinking water,irrigation ,கோதையாறு ஆணை,தண்ணீர்,எடப்பாடி பழனிசாமி,குடிநீர்,பாசனம்

இதனால், கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கோதையாறு பாசனத்திட்ட அணைகளில் இருந்து திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டத்திற்கு குடிநீருக்கு தண்ணீர் கிடைப்பதுடன், 17000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், விவசாய பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, உயர் மகசூல் பெற வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags :
|