Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனாவை விட அதிகசேதம் ஏற்படுத்தியவர்கள் திக்விஜய்சிங், கமல்நாத் என முதல்வர் சிவராஜ் சிங் கடும் குற்றச்சாட்டு

கொரோனாவை விட அதிகசேதம் ஏற்படுத்தியவர்கள் திக்விஜய்சிங், கமல்நாத் என முதல்வர் சிவராஜ் சிங் கடும் குற்றச்சாட்டு

By: Nagaraj Fri, 28 Apr 2023 09:12:26 AM

கொரோனாவை விட அதிகசேதம் ஏற்படுத்தியவர்கள் திக்விஜய்சிங், கமல்நாத் என முதல்வர் சிவராஜ் சிங் கடும் குற்றச்சாட்டு

போபால்: காங்கிரஸ் தலைவர்களான திக்விஜய் சிங் மற்றும் கமல்நாத் இருவரும் கொரோனா வைரஸை விட மாநிலத்துக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தி உள்ளனர் என மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கடுமையாக சாடியுள்ளார்.

மத்திய பிரதேச முன்னாள் முதல் மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான திக்விஜய் சிங், காங்கிரசின் கொரோனா வைரஸ் என மத்திய பிரதேச நீர்வளத்துறை மந்திரி துளசிராம் சமீபத்தில் கூறியிருந்தார்.

damage,state,kamal nath,retaliation,congress,chief minister ,சேதம், மாநிலம், கமல்நாத், பதிலடி, காங்கிரஸ், முதல்வர்

இதற்கு பதிலடி கொடுத்த திக்விஜய் சிங், பா.ஜ.க.வுக்கும், ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் நான்தான் கொரோனா வைரஸ் என தெரிவித்தார். இந்நிலையில், காங்கிரஸ் தலைவர்களின் கருத்தை மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கடுமையாக சாடியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், அவர் (திக்விஜய் சிங்) ஒரு சரியான ஒப்பீடு செய்துள்ளார். ஒப்பிடுவதற்கு அவர் வேறு எந்த வைரசையும் கண்டுபிடிக்கவில்லை. கொரோனா வைரசை மட்டுமே கண்டுபிடித்தது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. காங்கிரஸ் தலைவர்களான திக்விஜய் சிங் மற்றும் கமல்நாத் இருவரும் கொரோனா வைரஸை விட மாநிலத்துக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தி உள்ளனர் என தெரிவித்தார்.

Tags :
|
|