Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அடுத்த வாரம் 3 நாட்கள் மீண்டும் தென் மாவட்டங்களுக்கு பயணம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்

அடுத்த வாரம் 3 நாட்கள் மீண்டும் தென் மாவட்டங்களுக்கு பயணம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்

By: Nagaraj Sat, 10 Sept 2022 2:22:08 PM

அடுத்த வாரம் 3 நாட்கள் மீண்டும் தென் மாவட்டங்களுக்கு பயணம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: மீண்டும் தென் மாவட்டங்களுக்கு பயணம்... தென் மாவட்டங்களுக்குச் சென்று நேற்று சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின், அடுத்த வாரம் மூன்று நாட்கள், மீண்டும் தென் மாவட்டங்களுக்கு செல்ல உள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் வரும் 14ம் தேதி திண்டுக்கல் மாவட்டம் செல்கிறார். அங்கு, தோட்டநுாத்து என்ற இடத்தில், இலங்கை தமிழர்களுக்காக கட்டப்பட்டுள்ள 321 வீடுகளை, பயனாளிகளிடம் வழங்க உள்ளார். அன்று இரவு மதுரையில் தங்குகிறார்.

madurai,principal,entrepreneurship,discussion,chennai ,மதுரை, முதல்வர், தொழில் முனைவோர், கலந்துரையாடல், சென்னை

மறுநாள் காலை அண்ணாதுரை பிறந்த நாளையொட்டி, மதுரை சிம்மக்கல் அருகே நெல்பேட்டையில் அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவிக்கிறார். அதன் அருகில் உள்ள துவக்கப் பள்ளியில், 'முதல்வரின் காலை உணவு' திட்டத்தை துவக்கி வைக்க உள்ளார்.

இந்நிகழ்ச்சி முடிந்ததும் விருதுநகர் செல்கிறார். அங்கு 70 கோடி ரூபாயில், கலெக்டர் அலுவலக வளாக கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டுகிறார். மாலையில், தி.மு.க., சார்பில் நடக்கும் முப்பெரும் விழாவில் பங்கேற்கிறார்.

மறுநாள் மீண்டும் மதுரை செல்லும் முதல்வர், அங்கு தொழில் முனைவோர் கூட்டத்தில் பங்கேற்று, அவர்களுடன் கலந்துரையாட உள்ளார். இந்நிகழ்ச்சி முடிந்ததும் சென்னை திரும்ப உள்ளார்.

Tags :