Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ₹404 கோடியில் விரிவாக்கம்

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ₹404 கோடியில் விரிவாக்கம்

By: vaithegi Tue, 04 July 2023 10:17:25 AM

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்  ₹404 கோடியில் விரிவாக்கம்

சென்னை: காலை உணவுத் திட்டம் ₹404 கோடியில் விரிவாக்கம் செய்து அரசு அரசாணை வெளியீடு .... தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும், ஏழை மாணவர்களின் படிப்பினை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்துக் குறைபாட்டினை போக்கவும், கற்றல் இடைநிற்றலைத் தவிர்க்கவும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ,

அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ /மாணவியருக்கு முதற்கட்டமாக அனைத்துப் பள்ளி வேலை நாட்களிலும் காலை வேளைகளில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என அறிவித்தார்.

chief ministers breakfast program,snack ,முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ,சிற்றுண்டி


இதனை அடுத்து இந்த திட்டமானது பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாளையொட்டி கடந்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த நிலையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை ₹404 கோடியில் விரிவாக்கம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

எனவே இதன்மூலம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் செயல்படும் 31,008 அரசுப் பள்ளிகளில் பயிலும் 15.75 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர்.

Tags :