முதலமைச்சர் வருகை ... திருவாரூர் மாவட்டத்தில் நாளை, நாளை மறுநாள் ட்ரான் பறக்க தடை
By: vaithegi Mon, 20 Feb 2023 5:44:10 PM
சென்னை: சமீப காலமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “கள ஆய்வில் முதல்வர்” என்ற புதிய திட்டத்தின் மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கும் பயணம் மேற்கொண்டு, அரசு திட்டங்களையும் பார்வையிட்டு வருகிறார். மேலும் இதுதொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை மற்றும் ஆய்வுப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
அந்தவகையில், திருவாரூர் மாவட்டத்திற்கு நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இருக்கிறார். அவர் 2 நாட்கள் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதனால் பிப்ரவரி 22-ம் தேதி வரை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து நாளை திருச்சிக்கு விமானத்தில் செல்லும் முதல்வர் ஸ்டாலின், மன்னார்குடியில் நடைபெறும் திமுக பிரமுகரின் இல்லத் திருமண நிகழ்ச்சியில் பிப்ரவரி 22-ம் தேதி கலந்துகொள்கிறார்.
அதைத் தொடா்ந்து, திருவாரூா் மாவட்டம் காட்டூரில் கட்டப்பட்டு வரும் கலைஞா் அருங்காட்சியகம், மணிமண்டபம் அமைக்கும் பணிகள் பற்றியும் அவர் ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இதனையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், முதல்வர் வருகையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூர் மாவட்டத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் ட்ரோன்கள் பறக்கத் தடை விதித்து மாவட்ட காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.