Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சிலி நாட்டு சுகாதாரத்துறை மந்திரி ஜெய்மி மனாலிக் திடீரென ராஜினாமா

சிலி நாட்டு சுகாதாரத்துறை மந்திரி ஜெய்மி மனாலிக் திடீரென ராஜினாமா

By: Karunakaran Mon, 15 June 2020 2:49:56 PM

சிலி நாட்டு சுகாதாரத்துறை மந்திரி ஜெய்மி மனாலிக் திடீரென ராஜினாமா

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் உள்ள 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் உள்ள நாடுகள் கொரோனாவுக்கு எதிராக போராடி வருகின்றன. தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது.

சிலியில் கொரோனா வைரஸ் காரணமாக 1 லட்சத்து 67 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்தனர். தற்போது அங்கு புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

chile,jaime manalik,health minister,resigned ,சிலி,ஜெய்மி மனாலிக், சுகாதாரத்துறை மந்திரி, ராஜினாமா

இந்நிலையில் அந்நாட்டின் எதிர்க்கட்சிகள், சுகாதாரத்துறை மந்திரி ஜெய்மி மனாலிக் கொரோனா விவகாரத்தை சரியாக கையாளாததே இதற்கு காரணம் என குற்றம்ச்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறை மந்திரி ஜெய்மி மனாலிக் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.

தனது ராஜினாமா கடிதத்தை அந்நாட்டின் அதிபர் செபாஸ்டியன் பினேராவிடம் அளித்தார். அவரது ராஜினாமா கடிதத்தை அதிபர் ஏற்றுக்கொண்டார். தற்போது புதிய சுகாதாரத்துறை மந்திரியாக என்ரீக் பாரீஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கூடிய விரைவில் நாட்டில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டு வருவேன் என என்ரீக் பாரீஸ் உறுதி தெரிவித்துள்ளார்.

Tags :
|