இந்தியாவுடனான எல்லையை பாதுகாக்க சீனாவில் புதிய தளபதி நியமனம்
By: Karunakaran Sat, 06 June 2020 12:59:25 PM
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே உள்ள 3,488 கி.மீ. நீள எல்லையில், சீன ராணுவம் அடிக்கடி எல்லையை தாண்டி பிரச்சனையை ஏற்படுத்துகிறது இதனால் இருதரப்பு ராணுவத்தினருக்கு இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வருகிறது.
சமீபத்தில் லடாக் எல்லை பகுதியில் இரு தரப்பு ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு பதற்றம் நிலவுகிறது. இந்த பதற்றத்தை தணிக்க இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
தற்போது சீனா, இந்தியாவுடனான எல்லையை பாதுகாக்கும் மேற்கு மண்டல் படையின் தரைப்படை பிரிவுக்கு லென்டினன்ட் ஜெனரல் சூ கிலிங்கை புதிய தளபதியாக நியமித்துள்ளது.
தரைப்படை, விமானப்படை, ராக்கெட் படை ஆகியவை மேற்கு மண்டல படை பிரிவை உள்ளடங்கியது. இந்த மேற்கு மண்டல படை பிரிவின் ஒட்டுமொத்த தளபதியாக தற்போது சாவோ ஜோங்கி உள்ளார்.