Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவின் வடக்கு எல்லை பகுதியில் 60 ஆயிரம் வீரர்களை சீனா குவித்துள்ளது - மைக் பாம்பியோ

இந்தியாவின் வடக்கு எல்லை பகுதியில் 60 ஆயிரம் வீரர்களை சீனா குவித்துள்ளது - மைக் பாம்பியோ

By: Karunakaran Sun, 11 Oct 2020 09:12:40 AM

இந்தியாவின் வடக்கு எல்லை பகுதியில் 60 ஆயிரம் வீரர்களை சீனா குவித்துள்ளது - மைக் பாம்பியோ

கிழக்கு லடாக்கில் சீன ராணுவத்தின் அத்துமீறல் முயற்சிகளால் இந்திய-சீன வீரர்களிடையே மோதல் ஏற்பட்டு, உயிரிழப்பும் ஏற்படுகிறது. கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக லடாக் எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. அமைதியை ஏற்படுத்துவதற்காக இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்திலும், தூதரக ரீதியிலும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. மேலும், இருநாட்டு வெளியுறவு, ராணுவ மந்திரிகளும் கடந்த மாதம் மாஸ்கோவில் சந்தித்து பேசியிருந்தனர்.

பதற்றத்தை தணிப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சிகளை முறியடிக்கும் வகையில் இந்தியாவும் படைகளை குவித்து கண்காணிப்புகளை பலப்படுத்தி உள்ளது. இந்தநிலையில் குவாட் நாடுகள் என அறியப்படும் இந்தோ-பசிபிக் நாடுகளான இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் கடந்த செவ்வாய்க்கிழமை டோக்கியோவில் சந்தித்து பேசியபோது, சீனாவின் அத்துமீறல்களுக்கு மத்தியில், கிழக்கு லடாக், இந்தோ-பசிபிக் பிராந்தியம் மற்றும் தென்சீனக்கடல் பகுதிகளில் சீனாவின் எழுச்சி குறித்து விவாதிக்கப்பட்டது.

china,60000 soldiers,india,northern border,mike pompeo ,சீனா, 60000 வீரர்கள், இந்தியா, வடக்கு எல்லை, மைக் பாம்பியோ

இந்த கூட்டத்தில் இந்தியாவின் ஜெய்சங்கர், அமெரிக்காவின் மைக் பாம்பியோ உள்பட 4 நாடுகளின் மந்திரிகள் பங்கேற்று தனித்தனியாகவும், குழுவாகவும் சந்தித்து பேசினர். அதன்பின், அமெரிக்கா திரும்பிய மைக் பாம்பியோ, செய்தி நிறுவனங்களுக்கு அடுத்தடுத்து பேட்டியளித்தபோது, இந்த நாடுகள் அனைத்தும் சீன கம்யூனிஸ்டு கட்சியின் அச்சுறுத்தலால் உண்மையான ஆபத்தில் இருக்கின்றன. இந்தியர்கள் தங்கள் வடக்கு எல்லையில் 60 ஆயிரம் சீன வீரர்களை பார்த்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், சீன கம்யூனிஸ்டு கட்சி பல பத்தாண்டுகளாக நம்மை ஆதிக்கம் செலுத்த மேற்கு உலகம் அனுமதித்து இருக்கிறது. இதை அனைவரும் பார்த்துள்ளனர். இந்த விவகாரத்தில் நீண்ட காலமாக நாம் தூங்கிக்கொண்டு இருந்தோம் என்பதை குவாட் நாடுகளின் மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். எங்கள் அறிவுசார் சொத்துகளை சீனா அடிக்கடி களவாடி இருக்கிறது. லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளும் அவர்களே எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்தியாவுக்கு எதிராக வடக்கு எல்லையில் சீனா பெருமளவில் படைகளை குவித்து வருகிறது. மொத்தத்தில் சீன கம்யூனிஸ்டு கட்சியால் அச்சுறுத்தல் என்பதை அனைத்து நாடுகளும் உணர்ந்திருக்கின்றன என்று கூறினார்.

Tags :
|
|