Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்திய நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளது சீனா: ராகுல் கடும் குற்றச்சாட்டு

இந்திய நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளது சீனா: ராகுல் கடும் குற்றச்சாட்டு

By: Nagaraj Sun, 20 Aug 2023 9:16:18 PM

இந்திய நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளது சீனா: ராகுல் கடும் குற்றச்சாட்டு

லடாக்: இந்திய நிலத்தை ஆக்கிரமித்துள்ளது சீனா ஆக்கிரமித்துள்ளது என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 79-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளில் அவருக்கு எனது அஞ்சலி. டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் சோனியா காந்தியும், பிரியங்கா காந்தியும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் வீர்பூமி பகுதியில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி லடாக்கில் இருக்கிறார்.

பாங்காங் டிசோ ஏரி அருகே வைக்கப்பட்டுள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பேட்டியளித்த ராகுல் காந்தி, இந்திய நிலத்தில் ஒரு அங்குலம் கூட சீனா ஆக்கிரமிக்கவில்லை என்று பிரதமர் கூறியதில் உண்மையில்லை என ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

rahul gandhi,stay,travel,reasons,allegation ,ராகுல்காந்தி, தங்கலாம், பயணம், காரணங்கள், குற்றச்சாட்டு

இதுகுறித்து அவர் கூறியதாவது:- லடாக் மக்களிடம் இருந்து ஏராளமான புகார்கள் வந்தன. தங்களுக்கு வழங்கப்பட்ட அந்தஸ்தில் அவர்கள் மகிழ்ச்சியடையவில்லை. அவர்களுக்கு பிரதிநிதித்துவம் தேவை. வேலையில்லாத் திண்டாட்டம்தான் அங்கே பெரிய பிரச்சனை. தங்கள் நிலத்தை சீனா ஆக்கிரமிப்பதால், அப்பகுதி மக்கள் கவலையடைந்துள்ளனர்.

தங்களது மேய்ச்சல் நிலத்தை சீனப் படையினர் கைப்பற்றியதாக அவர்கள் கூறினர். ஆனால் சீனா ஒரு அங்குல நிலத்தை கூட ஆக்கிரமிக்கவில்லை என்று பிரதமர் கூறுகிறார். அவர் சொல்வது உண்மையல்ல. இதை நீங்கள் யாரிடமும் கேட்கலாம்.

நான் சிறுவனாக இருந்தபோது, ​​என் தந்தையுடன் பாங் காங் டிசோ பகுதிக்கு வந்தேன். இது பூமியில் மிக அழகான இடம் என்று அவர் என்னிடம் கூறினார். இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் போது நான் லடாக் வர திட்டமிட்டிருந்தேன்.

ஆனால் சில காரணங்களால் பயணத்தை நிறுத்தி வைக்க வேண்டியதாயிற்று. அதனால் இங்கே வந்து தங்கலாம் என்று நினைத்தேன். நுப்ரா பள்ளத்தாக்கு மற்றும் கார்கில் ஆகிய இடங்களுக்கும் செல்வேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
|
|