Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • லடாக்கில் சீனா நிலத்தை அபகரிக்கவில்லை... துணை நிலை ஆளுநர் மிஸ்ரா திட்டவட்டம்

லடாக்கில் சீனா நிலத்தை அபகரிக்கவில்லை... துணை நிலை ஆளுநர் மிஸ்ரா திட்டவட்டம்

By: Nagaraj Tue, 12 Sept 2023 6:09:04 PM

லடாக்கில் சீனா நிலத்தை அபகரிக்கவில்லை... துணை நிலை ஆளுநர் மிஸ்ரா திட்டவட்டம்

ஜம்மு: லடாக்கில் ஒரு சதுர அங்குல நிலத்தை கூட சீனா அபகரிக்கவில்லை என்று துணைநிலை ஆளுநர் மிஸ்ரா திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.

லடாக்கில் உள்ள இந்திய பகுதிகளை சீனா ஆக்கிரமிப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி வருகிறார். இதை மத்திய அரசும் மறுத்து வருகிறது. லடாக் துணைநிலை ஆளுநர் மிஸ்ராவும் ராகுல் காந்தியின் கருத்தை திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.

china,deputy governor,ladakh,land,schedule, ,சீனா, திட்டவட்டம், துணைநிலை ஆளுநர், நிலம், லடாக்

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘யாருடைய அறிக்கைக்கும் நான் கருத்து தெரிவிக்கமாட்டேன். ஆனால் உண்மையை சொல்ல வேண்டும். ஏனெனில் இங்கு ஒரு சதுர அங்குல நிலத்தை கூட சீனா ஆக்கிரமித்திருப்பதாக நான் காணவில்லை.

1962-ல் என்ன நடந்தாலும் அது தற்போது முக்கியமற்றது. ஆனால் இன்று நாம் நமது நிலத்தை கடைசி அங்குலம் வரை பாதுகாப்பாக வைத்திருக்கிறோம்’ என தெரிவித்தார். நமது ஆயுதப்படைகள் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக கூறிய மிஸ்ரா, அவர்களின் மன உறுதி மிகவும் அதிகமாக இருப்பதாகவும், ஒவ்வொரு சதுர அங்குல நிலத்தையும் பாதுகாப்பதே அவர்களின் நோக்கம் என்றும் கூறினார்.

Tags :
|
|
|