நிலவில் இருந்து பாறை துகள்களை எடுத்து வர விண்கலத்தை விண்ணில் செலுத்தியது சீனா
By: Karunakaran Tue, 24 Nov 2020 11:31:44 AM
அமெரிக்கா, ரஷியா போன்ற நாடுகள் நிலவிலிருந்து பாறை துகள்ளை பூமிக்கு எடுத்து வந்து ஆய்வு நடத்தின. இந்நிலையில் இந்த நாடுகளின் வரிசையில் தற்போது சீனாவும் சேர்ந்துள்ளனது. அதன்படி, நிலவை ஆராய்ச்சி செய்வதில் சீனா தீவிர கவனம் செலுத்தி வருகிறது. 1976-ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக சீனா நிலவிலிருந்து பாறை துகள்ளை பூமிக்கு எடுத்து வந்து ஆய்வு செய்ய உள்ளது.
இந்நிலையில் இதற்காக சேஞ்ச் 5 என்கிற ஆளில்லா விண்கலத்தை சீனா இன்று அதிகாலை விண்ணில் செலுத்தியது. அந்த நாட்டின் ஹனைன் மாகாணத்தில் உள்ள வென்சாங் ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச் 5 ராக்கெட் மூலம் சேஞ்ச் 5 விண்கலம் நிலவுக்கு புறப்பட்டது.
நிலவில் இருந்து வெற்றிகரமாக பாறை துகள்களை பூமிக்கு எடுத்து வரும் இந்த விண்கலம், டிசம்பரில் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விண்கலம் மூலம் நிலவில் இதுவரை கால் பதிக்காத பகுதியான ‘ஓஷன் ஆப் ஸ்டார்ம்ஸ்’ என்ற பகுதியிலிருந்து 2 கிலோ பாறை துகள்ளை எடுக்க சீனா திட்டமிட்டுள்ளது.
சீனாவின் இந்த திட்டம் வெற்றிகரமாக அமைந்தால் அமெரிக்கா ரஷியாவிற்கு பிறகு நிலவில் உள்ள பாறைகளை ஆராய்ச்சி செய்யும் 3-வது நாடு என்ற பெருமையை சீனா பெறும். மேலும் நிலவு குறித்த ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷ்யாவிற்கு பின் சீனா அடுத்த இடத்தை பிடித்து பெருமை சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.