சீனா- பாகிஸ்தான் இடையே ராணுவ புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது
By: Nagaraj Wed, 02 Dec 2020 9:17:27 PM
சீனா-பாகிஸ்தான் ராணுவ புரிந்துணர்வு ஒப்பந்தம்... இவ்வருட தொடக்கம் முதலே சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே எல்லை பிரச்சனைகள் தொடர்பாக மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இந்த நிலையில், சீன பாதுகாப்பு அமைச்சரும், அந்நாட்டு ராணுவ படைத் தலைவருமான ஜெனரல் வே பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.அப்போது அவர் பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி மற்றும் பிரதமர் இம்ரான் கான் ஆகியோரை சந்தித்தார்.
அத்துடன் அந்நாட்டு ராணுவத் தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பாஜ்வாவுடனும் சந்திப்பு நடத்தினார். அந்த சந்திப்பின் போது இருவரும் இணைந்து கூட்டாக புதிய ராணுவ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இது தொடர்பாக சீன ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், 'சீன பாதுகாப்பு
அமைச்சர் மற்றும் பாகிஸ்தான் ராணுவத் தளபதி இருவர் இடையே நடைபெற்ற
சந்திப்பின்போது சர்வதேச மற்றும் நாட்டில் நிழவும் சூழல்கள் குறித்து
விரிவாக விவாதிக்கப்பட்டன.
மேலும், இரு நாட்டு ராணுவங்களுக்கு
இடையிலான உறவுகள், தொழில்நுட்ப மற்றும் உபகரணங்கள் சார்ந்த ஒத்துழைப்பு
மற்றும் பிற பிரச்னைகள் குறித்து கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டது.
அத்துடன் பாகிஸ்தான், சீனா இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று
கையெழுத்திடப்பட்டுள்ளது' என தெரிவித்துள்ளது.
அந்த செய்தியில் இருநாட்டிற்கு இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் உள்ள தகவல்கள் குறித்து விரிவான தகவல்கள் வெளியிடப்படவில்லை.