Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஹாங்காங்கில் உள்ள அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய சீனா திட்டம்

ஹாங்காங்கில் உள்ள அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய சீனா திட்டம்

By: Karunakaran Fri, 28 Aug 2020 09:55:16 AM

ஹாங்காங்கில் உள்ள அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய சீனா திட்டம்

ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்புச்சட்டத்தை சீனா அமல்படுத்தியபின் அங்கு சீனாவின் தேசிய பாதுகாப்பு அலுவலகம் திறக்கப்பட்டது. ஹாங்காங் அரசின் அனுமதி இல்லாமல் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை சீனா நேரடியாக மேற்கொள்வதே இந்த சட்டத்தின் முக்கிய அம்சமாகும். இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டது முதல் ஹாங்காங்கில் செயல்பட்டு வந்த ஜனநாயக ஆதரவாளர்கள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஹாங்காங்கின் தன்னாட்சி அமைப்பிற்கு முடிவு கட்டும் நடவடிக்கையாக சீனாவின் இந்த நடவடிக்கை கருதப்படுகிறது. இந்நிலையில் சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கபட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. கொரோனா வைரஸ் ஹாங்காங்கில் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வரை ஹாங்காங்கில் 4 ஆயிரத்து 756 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

china,corona virus,hong kong,corona test ,சீனா, கொரோனா வைரஸ், ஹாங்காங், கொரோனா சோதனை

இந்நிலையில் தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்படுத்த பட்ட பின் முதல்முறையாக ஹாங்காங்கின் நிர்வாகத்தில் சீனா முதல்முறையாக தலையிடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. பாதுகாப்புத்துறை தவிர தற்போது மருத்துவ துறையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஹாங்காங்கில் உள்ள சுமார் 75 லட்சம் பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சீனா முடிவெடுத்துள்ளது.

ஹாங்காங்கின் நிர்வாகம் இல்லாமல் மருத்துவத்துறையில் சீனா நேரடியாக களமிறங்குவது இதுவே முதல்முறையாகும். 60 பேர் கொண்ட சீனாவின் மருத்துவக்குழு ஹாங்காங்கிற்கு செப்டம்பர் 1-ம் தேதி வர உள்ளது. இந்த நடவடிக்கை ஹாங்காங்கின் நிர்வாக ரீதியிலும், மக்களின் சுதந்திரத்தை ஒடுக்கும் நடவடிக்கை என பலர் கருத்து தெரிவித்துள்ளனர். கொரோனா பரிசோதனை என்ற பெயரில் ஹாங்காங்கிற்குள் அரசியல் ரீதியில் சீனா நுழைய முயற்சிப்பதாக பலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

Tags :
|