Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா வைரசின் தோற்றம் பற்றி ஆய்வு செய்வதற்கு சீனா தயார் - சீன வெளியுறவு மந்திரி

கொரோனா வைரசின் தோற்றம் பற்றி ஆய்வு செய்வதற்கு சீனா தயார் - சீன வெளியுறவு மந்திரி

By: Monisha Mon, 25 May 2020 1:00:52 PM

கொரோனா வைரசின் தோற்றம் பற்றி ஆய்வு செய்வதற்கு சீனா தயார் - சீன வெளியுறவு மந்திரி

கொரோனா வைரஸ் தொற்றால் கடும் பாதிப்பு ஒருபக்கம் இருக்கும் நிலையில், கொரோனா வைரஸ் தோற்றம் பற்றிய சர்ச்சையும் தொடர்ந்து நீடித்து வருகிறது. இது குறித்து சர்வதேச விசாரணை நடத்த பல நாடுகள் குரல் எழுப்பி வருகிறனர். இந்நிலையில் சீன வெளியுறவு மந்திரி வாங் யி, பீஜிங்கில் நேற்று அளித்த வருடாந்திர பேட்டியின்போது கூறியதாவது:-

கொரோனா வைரசின் தோற்றம் பற்றி ஆய்வு செய்வதற்கு சர்வதேச அறிவியல் சமூகத்துடன் விஞ்ஞான ரீதியில் ஒத்துழைப்பு தர சீனத்தரப்பு ஒரு திறந்த நிலைப்பாட்டை கொண்டு இருக்கிறது. இந்த ஆய்வு செயல்முறையானது, தொழில்முறையில் அமைய வேண்டும். நியாயமானதாகவும், ஆக்கப்பூர்வமானதாகவும் இருக்கக்கூடாது. நியாயமாக நாம் ஆய்வில் கொரோனா வைரஸ் தோற்றம் பற்றிய விவகாரத்தில் அரசியலை தவிர்க்க வேண்டும்.

coronavirus,china,coroner virus origins,us,chinese foreign minister ,கொரோனா வைரஸ்,சீனா,கொரோனா வைரஸ் தோற்றம் பற்றிய விவகாரம்,அமெரிக்கா,சீன வெளியுறவு மந்திரி

கொரோனா வைரஸ் சீற்றத்துக்கு மேலாக அமெரிக்காவில் ஒரு அரசியல் வைரசும் பரவுகிறது. அது சீனாவை தாக்கி இழிவுபடுத்துவதாகும். சில அமெரிக்க அரசியல்வாதிகள் அடிப்படை உண்மைகளை கவனிக்காமல், பல பொய்களை இட்டுக்கட்டி வருகிறார்கள். அத்துடன் பல சதித்திட்டங்களையும் தீட்டி உள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து கற்றுக்கொள்ளக்கூடிய மிக முக்கியமான விஷயம், பல்வேறு நாடுகளில் உள்ள மக்களின் வாழ்க்கையும், ஆரோக்கியமும் இப்போது போல ஒருபோதும் நெருக்கமாக இணைக்கப்படவில்லை என்பதுதான். அனைத்து நாடுகளும் ஒரே உலகளாவிய கிராமத்தில் வாழ்கின்றன என்பதையும், மனித நேயம் என்பது பகிரப்பட்ட எதிர்காலம் கொண்ட ஒரு சமூகம் என்பதையும், இதுவரை எதுவும் தெளிவுபடுத்தியது இல்லை.

coronavirus,china,coroner virus origins,us,chinese foreign minister ,கொரோனா வைரஸ்,சீனா,கொரோனா வைரஸ் தோற்றம் பற்றிய விவகாரம்,அமெரிக்கா,சீன வெளியுறவு மந்திரி

கொரோனா வைரசைப் பொறுத்தமட்டில் அதற்கு எல்லைகள் இல்லை. இனங்கள் கிடையாது. எந்த பாரபட்சமும் இன்றி ஒட்டு மொத்த மனித குலத்துக்கும் ஒரு சவாலாக அமைந்துள்ளது. அரசியல் ரீதியில் இதை கையாண்டால், அது வைரசுக்கு ஓட்டைகளை சுரண்டுவதற்கான வழியை கொடுக்கும். நாம் ஒவ்வொருவரும் பாதிக்கப்படக்கூடியவர்கள். அறிவியலை நிராகரித்தால், இந்த வைரஸ், பெரிய அழிவை ஏற்படுத்த அனுமதிப்பதாகும்.

சீனா மிகப்பெரிய வளரும் நாடாக உள்ளது. அமெரிக்கா, வளர்ந்த நாடு என்ற வகையில் அது உலக அமைதிக்கும், வளர்ச்சிக்கும், சிறப்பான பொறுப்பை கொண்டுள்ளது. அமெரிக்காவை மாற்றவோ, அந்த இடத்துக்கு இன்னொரு நாட்டை கொண்டு வரவோ சீனா நினைக்கவில்லை. ஆனால் சீனாவை மாற்ற அமெரிக்கா முயற்சிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டியதற்கான நேரம் வந்து விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
|
|