Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்க தேர்தலில் சீனா, ரஷியா மற்றும் ஈரான் நாடுகள் செல்வாக்கு செலுத்த முயற்சிக்கிறது - அமெரிக்க புலனாய்வுத்துறை

அமெரிக்க தேர்தலில் சீனா, ரஷியா மற்றும் ஈரான் நாடுகள் செல்வாக்கு செலுத்த முயற்சிக்கிறது - அமெரிக்க புலனாய்வுத்துறை

By: Karunakaran Sun, 09 Aug 2020 08:47:20 AM

அமெரிக்க தேர்தலில் சீனா, ரஷியா மற்றும் ஈரான் நாடுகள் செல்வாக்கு செலுத்த முயற்சிக்கிறது - அமெரிக்க புலனாய்வுத்துறை

கொரோனா வைரஸுக்கு மத்தியில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரும் நவம்பர் மாதம் 3ம் தேதி நடைபெறவுள்ளது. தற்போதைய அமெரிக்க ஜனாதிபதியும் குடியரசு கட்சி வேட்பாளருமான டொனால்டு டிரம்பிற்கும், முன்னாள் அமெரிக்க துணை ஜனாதிபதியும் ஜனநாயக கட்சி வேட்பாளருமான ஜோ பிடனுக்கும் இடையே இந்த தேர்தலில் கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் சீனா, ரஷியா மற்றும் ஈரான் நாடுகள் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் செல்வாக்கு செலுத்த விரும்புவதாக அமெரிக்க உயர் உளவுத்துறை தலைவர் எச்சரித்துள்ளார். வெளிநாடுகள் மாநிலங்களில் வாக்களிப்பைத் தடுக்க ரகசிய மற்றும் வெளிப்படையான செல்வாக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அமெரிக்க புலனாய்வுத்துறை (என்.சி.எஸ்.சி) தலைவர் வில்லியம் இவானினா தெரிவித்துள்ளார்.

china,russia,iran,us election,us intelligence ,சீனா, ரஷ்யா, ஈரான், அமெரிக்கத் தேர்தல், அமெரிக்க உளவுத்துறை

இதுகுறித்து அமெரிக்க புலனாய்வுத்துறை (என்.சி.எஸ்.சி) தலைவர் வில்லியம் இவானினா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் வெற்றி பெற சீனா விரும்பவில்லை என்றும், ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஜோ பிடனை காயமப்டுத்த ரஷியா விரும்புகிறது என கூறி உள்ளது. வெளிநாட்டு நாடுகள் வாக்காளர் விருப்பங்களைத் திசைதிருப்பவும், அமெரிக்க கொள்கைகளை மாற்றவும், "நாட்டில் கருத்து வேறுபாட்டை அதிகரிக்கவும்" முயற்சிக்கின்றன. என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அதில், நமது ஜனநாயக வழிமுறையில் அமெரிக்க மக்களின் நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன. எவ்வாறாயினும், நமது எதிரிகளுக்கு வாக்களிப்பு முடிவுகளை தலையிடுவது அல்லது கையாளுவது கடினம் என்று வில்லியம் இவானினா கூறியுள்ளார்

Tags :
|
|
|