Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வந்தே பாரத் ரெயில்களுக்கான பெட்டிகளை தயாரிக்க விடப்பட்ட டெண்டரை கைப்பற்ற சீனா முயற்சி

வந்தே பாரத் ரெயில்களுக்கான பெட்டிகளை தயாரிக்க விடப்பட்ட டெண்டரை கைப்பற்ற சீனா முயற்சி

By: Karunakaran Sat, 22 Aug 2020 4:38:45 PM

வந்தே பாரத் ரெயில்களுக்கான பெட்டிகளை தயாரிக்க விடப்பட்ட டெண்டரை கைப்பற்ற சீனா முயற்சி

லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே கடந்த ஜூன் 15 ஆம் தேதி மோதல் ஏற்பட்டபோது, 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும் சீன தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டது. இந்த மோதலுக்கு பின், இந்தியா-சீனா இடையே கடுமையான மோதல்போக்கு நிலவி வருகிறது. மேலும், சீன பொருட்கள் மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதனால், சீனா மீது இந்தியா பல்வேறு வர்த்தக கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும், இந்தியாவில் செயல்பட்டு வரும் சீன நிறுவனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. டிக்டாக், யூசி பிரவுசர், வி-சாட், யூ-கேம், ஹலோ, ஷேர் இட் உள்ளிட்ட 100-க்கும் அதிகமான சீன செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை விதித்தது.

china,tender,vande bharat train,india ,சீனா, டெண்டர், வந்தே பாரத் ரயில், இந்தியா

சீன நிறுவனங்களுடனான அரசின் வர்த்தக ரீதியிலான ஒப்பங்கள் பலவும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், வந்தே பாரத் விரைவு ரெயில்களுக்கான 44 ரெயில் பெட்டிகளை தயாரிக்க இந்திய ரெயில்வே சர்வதேச அளவிலான டெண்டர் விட்டது. சர்வதேச அளவில் ஒரே ஒரு இந்திய நிறுவனம் மட்டுமே பங்கேற்றது. ஆனால் அந்த நிறுவனம் சீனாவை தலைமையாக சிஆர்ஆர்சி எலக்ட்ரானிக்ஸ் என்பது தெரியவந்தது.

வந்தேபாரத் ரெயில் பெட்டிகள் தயாரிப்புக்கான டெண்டரை சீன நிறுவனம் கைப்பற்ற முயன்றது. தற்போது விரைவு ரெயில்களுக்கான 44 ரெயில் பெட்டிகளை தயாரிப்பது தொடர்பாக விடப்பட்ட சர்வதேச டெண்டரை இந்திய ரெயில்வே ரத்து செய்துள்ளது. இந்த டெண்டர் இன்னும் சில நாட்களில் மீண்டும் விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|