Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தைவான் நோக்கி 23 போர் விமானங்கள், 4 போர்க்கப்பல்களை அனுப்பிய சீனா

தைவான் நோக்கி 23 போர் விமானங்கள், 4 போர்க்கப்பல்களை அனுப்பிய சீனா

By: Nagaraj Fri, 03 Feb 2023 11:07:16 PM

தைவான் நோக்கி 23 போர் விமானங்கள், 4 போர்க்கப்பல்களை அனுப்பிய சீனா

பீஜிங்: கடந்த 24 மணி நேரத்தில் தைவான் நோக்கி 23 போர் விமானங்கள் மற்றும் 4 போர்க்கப்பல்களை சீனா அனுப்பியுள்ளது. இது அங்கு புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தகவலை தைவான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

தைவான் தென்கிழக்கு சீனக் கடற்கரையிலிருந்து 100 மைல் தொலைவில் அமைந்துள்ள ஒரு தீவு நாடு. தைவான் 1949 முதல் ஒரு சுதந்திர நாடாக இருந்து வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் அங்கு ஆட்சி செய்கிறது. ஆனால் தைவானை தனது மாகாணங்களில் ஒன்றாக சீனா கருதுகிறது.

தைவானை இணைத்துக் கொள்ள சீனா அழுத்தம் கொடுத்து வருகிறது. அப்படி இணைத்தால் மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் கை ஓங்கும். இது அமெரிக்க ராணுவ தளங்களுக்கும் அச்சுறுத்தலாக அமையும். எனவே சீனாவின் கனவுக்கு அமெரிக்கா குறுக்கே நிற்கிறது. தைவான் மீது படையெடுக்க சீனா ராணுவ நடவடிக்கை எடுத்தால், அமெரிக்கா தலையிடும் அபாயம் உள்ளது.

china,planes,ships,taiwan,war , கப்பல்கள், சீனா, தைவான், போர், விமானங்கள்

இதனால் தைவானில் எப்போதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகராக இருந்த நான்சி பெலோசி கடந்த ஆகஸ்ட் மாதம் தைவான் சென்றார். இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்தது.
ஆனால், அமெரிக்கா மட்டுமின்றி பிரான்ஸ், ஜப்பான் ஆகிய நாடுகளும் தைவானுக்கு தூதுக்குழுவை அனுப்புவது சீனாவின் எரியும் நெருப்பில் எண்ணெய் சேர்ப்பது போன்றது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தைவான் நோக்கி 23 போர் விமானங்கள் மற்றும் 4 போர்க்கப்பல்களை சீனா அனுப்பியுள்ளது. இது அங்கு புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தகவலை தைவான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இது குறித்து தைவான் பாதுகாப்பு அமைச்சகம் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- தைவான் அருகே இன்று காலை 6 மணி வரை 23 சீன போர் விமானங்களும், 4 போர்க்கப்பல்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

இரண்டு J-11 போர் விமானங்கள், எட்டு J-16 போர் விமானங்கள் மற்றும் மூன்று Su-30 போர் விமானங்கள் மற்றும் PZK-005 ட்ரோன் உட்பட மொத்தம் 17 சீன போர் விமானங்கள் தைவான் ஜலசந்தியின் எல்லைக் கோட்டைக் கடந்தன என பதிவிட்டுள்ளார். நிலைமையைக் கண்காணிக்க தைவான் வான் மற்றும் கடல் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. இது தவிர ஏவுகணை அமைப்புகளும் தரையில் நிறுவப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags :
|
|
|
|