Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீனா கடல் ஏவுதளத்தில் இருந்து 9 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது

சீனா கடல் ஏவுதளத்தில் இருந்து 9 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது

By: Karunakaran Wed, 16 Sept 2020 09:41:27 AM

சீனா கடல் ஏவுதளத்தில் இருந்து 9 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது

சீனாவின் ஜிலின் மாகாணம் சாங்சுன் நகரில் மஞ்சள் கடல் பகுதியில் சீனா தனது 2-வது கடல் ஏவுதளத்தை அமைத்துள்ளது. இந்த ஏவுதளத்தில் உள்ள ஒரு கப்பலில் இருந்து ராக்கெட் ஏவ சீனா முயற்சி மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் நேற்று வெற்றிகரமாக ராக்கெட் ஒன்றை சீனா விண்ணில் செலுத்தியது.

இந்த ராக்கெட் மூலம் 9 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. லாங் மார்ச் 11 கேரியர் ராக்கெட், 3 வீடியோ செயற்கைக்கோள்கள், 6 புஷ்புரூம் செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது. இந்த 6 செயற்கைக்கோள்களும் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதாக சீனா தெரிவித்துள்ளது.

china,9 satellites,sea launch pad,rocket ,சீனா, 9 செயற்கைக்கோள்கள், கடல் ஏவுதளம், ராக்கெட்

தலா 42 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக்கோள்கள் வேளாண்மை, வனவியல் நில வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற துறைகளில் தொலைநிலை உணர்திறன் சேவைகளை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் சீனா பல தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வருகின்றது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சீனா விண்ணுக்கு அனுப்பிய செயற்கைகோள் ஒன்று சுற்றுவட்ட பாதையில் நுழையாமல் தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ஒரு ராக்கெட் மூலமாக 9 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வெற்றி கண்டுள்ளது.

Tags :
|