பாதுகாப்பு சட்டத்தை இம்மாதம் இறுதியில் அமுல்படுத்த சீனா முடிவு
By: Nagaraj Mon, 22 June 2020 5:36:28 PM
ஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய பாதுகாப்புச் சட்டத்தை இம்மாத இறுதியில் அமுல்படுத்த சீனா முடிவு செய்துள்ளது.
ஹாங்காங்கில் குற்ற வழக்குகளில் சிக்கியவர்களை சீனாவுக்கு அழைத்துச் சென்று விசாரிக்கும் முறைக்கு எதிராக கடந்த பெரும் போராட்டம் வெடித்தது. இறுதியில் இந்தப் போராட்டம் சுதந்திரம் என்ற கோரிக்கையை நோக்கி நகர்ந்தது.
இதையடுத்து சீனாவுக்கு எதிரான போராட்டங்களைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக தேசிய பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
புதிய
சட்டத்தில், பிரிவினைவாதம் மற்றும் தேசவிரோதச் செயல்களைத் தடுப்பதற்கான
கூடுதல் சட்ட அதிகாரங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சீனாவின்
உயர்மட்டக் குழுக் கூட்டம் வரும் 28 முதல் 30ந் தேதி வரை நடக்க உள்ளது.
அப்போது ஹாங்காங்கில் அமுல்படுத்தப்படும் சட்டம் கொண்டு வரப்படலாம் எனத்
தகவல்கள் வெளியாகி உள்ளன.