Advertisement

கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்த சீன அரசு முடிவு

By: vaithegi Fri, 02 Dec 2022 09:53:22 AM

கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்த சீன அரசு முடிவு


பீஜிங்: கடும் கட்டுப்பாடுகளை தளர்த்த சீன அரசு முடிவு ....... சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் வேகமாக பரவி கொண்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் 36,061 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டது. சீனாவின் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு விதித்துள்ள கடுமையான கட்டுப்பாடுகளால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். ஜின்ஜியாங் மாகாணத்தில் உரும்கி நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட தீ விபத்தில் ௧௦ பேர் உயிரிழந்தனர்.

இந்த கொரோனா கட்டுப்பாடுகளால்தான் அவர்கள் வெளியேற முடியாமல் உயிரிழந்ததாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. இதனையடுத்து கடந்த மாதம் போராட்டத்தில் குதித்தனர். ஜின்ஜியாங் மாகாணத்தின் தலைநகர் உரும்கியில் தொடங்கிய இப்போராட்டம் நாடு முழுவதும் பரவி மிக தீவிரமடைந்தது.

corona,restrictions ,கொரோனா ,கட்டுப்பாடுகள்

எனினும், போராட்டம் தீவிரமாக இருந்து வந்த அனைத்து நகரங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டதால் போராட்டம் முடங்கியது. இந்த நிலையில் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தின் தலைநகரான குவாங்சூ நகரில் கொேரானாகட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து நூற்றுக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராடிய நிலையில் அவர்களை கலைக்க போலீசார் முற்பட்டபோது இருதரப்புக்கும் இடையில் கடும் மோதல் வெடித்தது.போராட்டக்காரர்கள் கண்ணாடி பாட்டில்கள் உள்ளிட்டவற்றை போலீசார் மீது வீசி எறிந்தனர். அதை தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தியதாகவும், பலர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்த சீன அரசு முடிவு செய்துள்ளது.

Tags :
|