Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழியும் சீன வைத்தியசாலைகள்

கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழியும் சீன வைத்தியசாலைகள்

By: Nagaraj Sat, 17 Dec 2022 11:23:51 PM

கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழியும் சீன வைத்தியசாலைகள்

சீனா: சீனாவில் கொரோனா நோயாளர்களால் வைத்தியசாலைகள் நிரம்பி வழிகிறது என்று தகவல்கள் வெளியாகிறது.

சீனாவின் உஹான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவத்தொடங்கியதையடுத்து உலக நாடுகளையெல்லாம் இந்தப் பெருந்தொற்று தவிக்க வைத்தது.

தற்போது அமெரிக்கா, இந்தியா,இலங்கை என பெரும்பாதிப்புக்கு ஆளான நாடுகள் பலவும் கொரோனாவை பெருமளவில் கட்டுப்படுத்தி விட்டன. ஆனால் சீனாவில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை என்ற நிலையை ஏற்படுத்துவதற்காக கடுமையான ஊரடங்கு பொது முடக்கங்கள், கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன.

consular staff,china,corona,patients,officials ,தூதரக பணியாளர்கள், சீனா, கொரோனா, நோயாளிகள், அதிகாரிகள்

ஒரு கட்டத்தில் இது மக்களுக்கு விரக்தியை ஏற்படுத்தியதனால் அங்கு கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து போராட்டங்கள் வலுத்தன. இதன் காரணமாக அங்கு கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்ட நிலையில், பரிசோதனை மையங்கள் மூடப்பட்டன.

தனிமைப்படுத்திக் கொள்வது தளர்த்தப்பட்டது. பொதுமக்கள் லேசான அறிகுறிகளுக்கு வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. கட்டுப்பாடுகளை தளர்த்தியதால் அங்கு 15 நாட்களாக கொரோனா (ஒமிக்ரோன்) அலை தாண்டவமாடத் தொடங்கி உள்ளது.

கொரோனா வைரஸ் சீனாவில் யாரையும் விட்டு விடவில்லை. சீன வெளியுறவு அமைச்சக அதிகாரிகள், ஊழியர்கள், பீஜிங் தூதரக பணியாளர்கள், பத்திரிகையாளர்கள் என பல தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர்.

Tags :
|
|