மறைந்த பாடகர் எஸ்.பி.பிக்கு 339 கிலோ எடையில் சாக்லேட் சிலை
By: Nagaraj Wed, 23 Dec 2020 10:32:27 PM
சாக்லேட் சிலை... மறைந்த பாடகர் எஸ்.பி.பிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் புதுச்சேரியில் 339 கிலோ எடையில் சாக்லெட்டுகளை கொண்டு 5.8 அடி உயரமும், 339 கிலோ எடையும் கொண்ட எஸ்.பி.பாலசுப்ரமணியனின் சாக்லெட் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள 'சூகா' என்ற சாக்லெட் ஷாப்பில் ஆண்டுதோறும் புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, பல்வேறு பிரபலங்களின் உருவங்கள் ஷாப்பிங் சிலையாக வடிவமைக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்படும்.
இந்த ஆண்டு மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், 339 கிலோ சாக்லெட்டை கொண்டு 5.8 அடி உயரத்தில் அவரது உருவ சாக்லெட் சிலையை வடிவமைத்துள்ளனர்.
161 மணி நேரத்தில் தத்ரூபமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த சிலை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இதற்கு
முன்பு ராணுவ வீரர் அபிநந்தன், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம்,
கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், நடிகர் ரஜினிகாந்த், கார்ட்டூன்
கதாப்பாத்திரம் மிக்கி மவுஸ் உள்ளிட்ட 12 பிரபலங்களின் சிலைகள்
வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இந்த சாக்லேட் சிலை வரும் ஜனவரி 10-ம்
தேதி வரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் என சாக்லேட் சிலையை
உருவாக்கிய செப் ராஜேந்திரன் தெரிவித்தார்.