Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாநகர பஸ் டிரைவர்,கண்டக்டர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்

மாநகர பஸ் டிரைவர்,கண்டக்டர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்

By: vaithegi Sat, 09 July 2022 6:55:18 PM

மாநகர பஸ் டிரைவர்,கண்டக்டர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்

தமிழகம் : தமிழகத்தில் சென்னை புறநகரில் கொரோனா தீவிரமெடுத்துள்ளதால், மாநகர பஸ் டிரைவர்-கண்டக்டர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழகம் சுற்றறிக்கைஒன்றை வெளியிட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் சார்ந்த திருவள்ளுர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தின் எல்லைப்புற பகுதிகளில் மாநகர போக்குவரத்து கழகம் பேருந்துகளை இயக்கி வருகிறது. கொரோனா பரவலை முழுவதுமாக ஒழிக்கும் பொருட்டு, அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அரசு எடுத்து வருகிறது. இதன் அடிப்படையில் பொது இடங்களில், மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

face mask,driver,conductors ,முகக்கவசம் ,டிரைவர்,கண்டக்டர்கள்

இதனால் அனைத்து மாநகர போக்குவரத்து கழக டிரைவர், கண்டக்டர்கள் அனைவரும் டிரைவர், கண்டக்டர்கள் முகக்கவசம் அணிந்து பணிபுரிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து டிரைவர், கண்டக்டர்கள் தங்களது கைகளை அடிக்கடி சோப்பு கொண்டு சுத்தம் செய்து பாதுகாப்பாக பணிபுரிய வேண்டும்.

மேலும் கண்டக்டர்கள் பணியின் போது எச்சில் தொட்டு டிக்கெட் வழங்குதலை அறவே தவிர்த்திட வேண்டும். மேற்கூறப்பட்ட அறிவுறுத்தல்களை அனைத்து கிளை மேலாளர்கள், மண்டல மேலாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் டிரைவர், கண்டக்டர்கள் தவறாது பின்பற்றுவதை உறுதி செய்தல் வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

Tags :
|