Advertisement

இன்று 11-ம் வகுப்பு பொத்தேர்வு தொடக்கம்

By: vaithegi Tue, 14 Mar 2023 11:12:16 AM

இன்று 11-ம் வகுப்பு பொத்தேர்வு தொடக்கம்

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரியில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இதையடுத்து மாநிலம் முழுவதும் 3,225 மையங்கள் அமைக்கப்பட்டு, அறை கண்காணிப்பாளர்களாக 90 ஆயிரத்து 70 பேரும், பறக்கும் படை உறுப்பினர்களாக 3 ஆயிரத்து 100 பேரும், நிலையான படை உறுப்பினர்களாக 2 ஆயிரத்து 269 பேரும் நியமனம் செய்யப்பட்டனர்.

காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வானது மதியம் 1.15 மணி வரை நடைபெற்றது. இதில் முதல் 15 நிமிடங்கள் விவரங்களை சரிபார்ப்பதற்கும், வினாத்தாள் வாசிக்கவும் வழங்கப்பட்டது. அதற்கு பிறகு விடை எழுத அனுமதிக்கப்பட்டனர்.

general examination,question paper ,பொத்தேர்வு ,வினாத்தாள்

தேர்வு மையங்களில் செல்போன், கணினி எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டது. நேற்று நடைபெற்ற 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 50, 674 பேர் எழுதவில்லை என்று பள்ளி கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்த 8 லட்சத்து 51 ஆயிரம் மாணவர்களில் 50, 674 பேர் முதல் நாளில் ஆப்சென்ட் ஆகியுள்ளதாகவும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இன்று 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. இன்று தொடங்கும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு வருகிற ஏப்ரல் மாதம் 5- ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனை அடுத்து இன்று நடைபெறவுள்ள 11ம் வகுப்பு பொதுத்தேர்வை 7.88 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகிறன.

Tags :