Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 12ம் வகுப்பு துணைத்தேர்வு மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியிடப்படவுள்ளது

12ம் வகுப்பு துணைத்தேர்வு மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியிடப்படவுள்ளது

By: vaithegi Mon, 04 Sept 2023 1:27:45 PM

12ம் வகுப்பு துணைத்தேர்வு மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியிடப்படவுள்ளது

சென்னை: 2022 -2023ம் ஆண்டுக்கான பள்ளிக்கல்வியின் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடத்தப்பட்டது. இந்த தேர்வின் முடிவுகள் மே மாதத்தில் வெளியிடப்பட்டது.

இதையடுத்து அதில், 47 மாணவர்கள் தேர்ச்சி பெற தவறியிருந்தனர். இவர்களுக்காக ஜூன் 12 முதல் 26ம் தேதி வரை துணை தேர்வுகள் பாட வாரியாக நடத்தப்பட்டது. இந்த தேர்வுகளின் முடிவுகள் கடந்த ஜூலை 24ம் தேதி வெளியிடப்பட்டது.

results,secondary examination,revaluation ,முடிவுகள் ,துணைத்தேர்வு ,மறுமதிப்பீடு

துணை தேர்வின் மதிப்பெண்களை மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்த நபர்களின் முடிவுகள் இன்று அதாவது செப்டம்பர் 4ம் தேதி வெளியிடப்பட உள்ளது. மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்த மாணவர்களின் பட்டியல் இன்று பிற்பகல் www.dge.tn.gov இணையதளத்தில் வெளியிடப்படும்.

மேலும் மதிப்பெண்களில் மாற்றம் உள்ள நபர்களின் பதிவு எண் மட்டுமே பட்டியலில் இடம் பெறும். உங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து திருத்தும் செய்யப்பட்ட மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :