Advertisement

  • வீடு
  • செய்திகள்
  •  நாளை முதல் வரும் 17-ம் தேதி வரை இங்கு 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூடல்

 நாளை முதல் வரும் 17-ம் தேதி வரை இங்கு 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூடல்

By: vaithegi Sat, 14 Jan 2023 6:45:11 PM

 நாளை முதல் வரும் 17-ம் தேதி வரை இங்கு 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூடல்

சென்னை: தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரையில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் நாளை முதல் 17-ம் தேதி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதை அடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கோலாகலமாக துவங்கியுள்ளது. இதையடுத்து இந்த பொங்கல் பண்டிகையின் முக்கிய நிகழ்வான ஜல்லிக்கட்டு மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு சில இடங்களில் நடத்தப்பட உள்ளது.

tasmac,pongal festival,closure ,டாஸ்மாக் ,பொங்கல் பண்டிகை,மூடல்

அந்த வகையில், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதை முன்னிட்டு 16 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

எனவே அதன்படி, ஜல்லிக்கட்டு நடைபெறும் அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் நாளை ,ஜனவரி 16 ,17 போன்ற தேதிகளில் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|