Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஆலோசனை

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஆலோசனை

By: Monisha Mon, 23 Nov 2020 3:39:14 PM

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஆலோசனை

தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறியது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும் இந்த நிவர் புயல் நாளை மறுநாள் பிற்பகல் மாமல்லபுரம்-காரைக்கால் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும், இதன்மூலம் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மூன்று நாள்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனத் அறிவிக்கப்பட்டுள்ளது.

storm,precaution,advice,action,impact ,புயல்,முன்னெச்சரிக்கை,ஆலோசனை,நடவடிக்கை,பாதிப்பு

நாளை கடலோர மாவட்டங்களில் மணிக்கு 80 முதல் 90 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும். இடையிடையே 100 கிமீ வேகத்திலும் காற்று வீசக்கூடும். நாளை மறுநாள் புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 100 முதல் 110 கிமீ வேகத்திலும், இடையிடையே 120 கிமீ வேகத்திலும் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இந்நிலையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் புயலால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பது தொடர்பாக மூத்த அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.

Tags :
|
|
|