Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

By: Monisha Wed, 10 June 2020 10:30:29 AM

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 2-ந்தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இந்நிலையில் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் இன்று காலை 8.05 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

dmk mla,j anbalan,passed away,edappadi palanisamy,condolence ,திமுக எம்எல்ஏ,ஜெ.அன்பழகன்,காலமானார்,எடப்பாடி பழனிசாமி,இரங்கல்

திமுக சட்டமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் முன்னோடி நிர்வாகிகளில் ஒருவருமான ஜெ.அன்பழகன் அவர்கள் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அன்னாரது குடும்பத்தினருக்கும் அவர் சார்ந்த இயக்கத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதே போன்று பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tags :