Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கள ஆய்வு செய்வதற்கு கடலூர் செல்கிறார் முதல்வர்

புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கள ஆய்வு செய்வதற்கு கடலூர் செல்கிறார் முதல்வர்

By: Monisha Thu, 26 Nov 2020 10:27:56 AM

புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கள ஆய்வு செய்வதற்கு கடலூர் செல்கிறார் முதல்வர்

நிவர் புயல் காரணமாக கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளன. மரங்கள் விழுந்ததால் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. வீடுகளின் கூரைகள் பெயர்ந்து காற்றில் அடித்துச் செல்லப்பட்டன.

சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணியிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதிலும் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளில் வீடுகளை சூழ்ந்துள்ள மழைநீரை வெளியேற்றும் நடவடிக்கையும் நடைபெற்று வருகிறது.

storm,rain,damage,cm,visit ,புயல்,மழை,பாதிப்பு,முதல்வர்,ஆய்வு

இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் கடலூர் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னை சைதாப்பேட்டையில் மழையினால் ஏற்பட்ட பாதிப்புகளை இன்று நேரில் ஆய்வு செய்கிறார்.

Tags :
|
|
|
|