Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நடிகர் ரஜினி கட்சியை பதிவு செய்த பின்பு அதைப் பற்றி பேசலாம் - முதல்வர் கருத்து

நடிகர் ரஜினி கட்சியை பதிவு செய்த பின்பு அதைப் பற்றி பேசலாம் - முதல்வர் கருத்து

By: Monisha Sat, 05 Dec 2020 10:32:12 AM

நடிகர் ரஜினி கட்சியை பதிவு செய்த பின்பு அதைப் பற்றி பேசலாம் - முதல்வர் கருத்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்ற பலவருட கேள்விக்கு நேற்று முன்தினம் விடை கிடைத்தது. இதைத்தொடர்ந்து, டிசம்பர் 31ஆம் தேதி தான் அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிட இருப்பதாகவும், ஜனவரி மாதம் கட்சி தொடங்க இருப்பதாகவும் அறிவித்தார்.

மேலும் அர்ஜுனா மூர்த்தி மற்றும் தமிழருவி மணியன் ஆகிய இருவரை நியமனம் செய்த ரஜினிகாந்த் அவர்கள் இருவரும் ரஜினி மக்கள் மன்றத்தை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வார்கள் என்றும் தெரிவித்தார்.

actor rajini,party,politics,edappadi palanisamy,comment ,நடிகர் ரஜினி,கட்சி,அரசியல்,எடப்பாடி பழனிசாமி,கருத்து

இந்த நிலையில் ரஜினியின் அரசியல் வருகை குறித்து அதிமுக திமுக உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வந்தனர். குறிப்பாக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் ரஜினியின் அரசியல் வருகைக்கு வாழ்த்து கூறியதோடு தேவைப்பட்டால் ரஜினி கட்சியுடன் கூட்டணி வைப்போம் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது முதல் முறையாக ரஜினியின் அரசியல் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனது கருத்தை கூறியுள்ளார். 'நடிகர் ரஜினி கட்சியை பதிவு செய்த பின்பு அதைப் பற்றி பேசலாம்' என்று அவர் ரஜினி அரசியல் குறித்த கேள்விக்கு பதில் அளித்தார்.

Tags :
|