Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தண்ணீரில் மூழ்கி இறந்த 4 குழந்தைகளின் குடும்பத்திற்கு முதல்வர் நிவாரண நிதி

தண்ணீரில் மூழ்கி இறந்த 4 குழந்தைகளின் குடும்பத்திற்கு முதல்வர் நிவாரண நிதி

By: Nagaraj Sun, 19 Mar 2023 1:26:36 PM

தண்ணீரில் மூழ்கி இறந்த 4 குழந்தைகளின் குடும்பத்திற்கு முதல்வர் நிவாரண நிதி

சென்னை: தண்ணீரில் மூழ்கி இறந்த 4 குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சிங்கம்புணரி வாரப்பூர் உள்வட்டம், 03-உலகம்பட்டி குழுமம் படமிஞ்சி கிராமத்தில் உள்ள செட்டி ஊருணியில் நேற்று அதே கிராமத்தைச் சேர்ந்த யாமினி த/பெ. நாகராஜ் (வயது 10), மகேந்திரன் த/பெ. (லேட்) லெட்சுமணன் (வயது 07), மற்றும் சந்தோஷ் த/பெ. (லேட்) லெட்சுமணன் (வயது 05) ஆகிய மூன்று சிறுவர்களும் குளிக்கச் சென்ற பொழுது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தி கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

bereavement,childbirth,condolences,family,funding,m k stalin,rs.1 lakh, ,இரங்கல், உயிரிழப்பு, குடும்பம், சிறுவர்கல், நிதியுதவி, மு.க.ஸ்டாலின், ரூ.1 லட்சம்

இதேபோல், மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், மேலையூர் சரகம் மற்றும் கிராமம் ஐயர் காலனியைச் சேர்ந்த 11ம் வகுப்பு படித்து வந்த மாணவன் அபினேஷ் (வயது 16) த/பெ.மகேந்திரன் என்பவர் அதே தெருவின் பின்புறம் உள்ள தனியாருக்கு சொந்தமான மீன் வளர்ப்பு குட்டைக்கு குளிக்க சென்ற பொழுது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என்ற துயரச் செய்தினையும் கேட்டு மிகவும் வேதனையடைந்தேன்.

உயிரிழந்த 4 குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

Tags :
|