Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எம்.ஜி.ஆர். சிலைக்கு காவி துண்டு அணிவிக்கப்பட்ட சம்பவம்: முதல்வர் கடும் கண்டனம்

எம்.ஜி.ஆர். சிலைக்கு காவி துண்டு அணிவிக்கப்பட்ட சம்பவம்: முதல்வர் கடும் கண்டனம்

By: Monisha Fri, 24 July 2020 3:34:48 PM

எம்.ஜி.ஆர். சிலைக்கு காவி துண்டு அணிவிக்கப்பட்ட சம்பவம்: முதல்வர் கடும் கண்டனம்

வில்லியனூரில் புதுச்சேரி - விழுப்புரம் புறவழிச்சாலையின் நடுவே எம்.ஜி.ஆர். சிலை உள்ளது. இந்த சிலையின் கழுத்தில் காவி வேட்டியை துண்டு போல் அணிவிக்கப்பட்டு இருந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். எம்.ஜி.ஆர். சிலைக்கு காவி துண்டு அணிவிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு காவி துண்டு அணிவிக்கப்பட்ட சம்பவத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

சிலைக்கு காவி துண்டு அணிவித்து களங்கப்படுத்திய கொடுஞ்செயல் மன வேதனையை தருகிறது. இச்செயல் காட்டுமிராண்டித்தனம் கடுமையாக கண்டிக்கத்தக்கது. சமூகத்திற்கு தொண்டாற்றிய தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துவது வருத்தத்தை தருகிறது.

ஒருமைப்பாடு, ஒற்றுமைக்கு குந்தகம் விளைவித்து ஓட்டு அரசியல் பிழைப்பிற்கு சிலர் திட்டமிடுகின்றனர். சிலையை அவமதித்தவர்கள், அவர்களை பின்னாலிருந்து இயக்கியவர்களை தோலுரித்து காட்ட வேண்டும். சிலையை அவமதித்தவர்கள் மீது புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Tags :
|