முதலமைச்சர் வருகிற 13-ந்தேதி முதல் 3 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம்
By: Monisha Fri, 09 Oct 2020 12:21:19 PM
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 13-ந்தேதி முதல் 3 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை மொத்தம் 6 லட்சத்து 40 ஆயிரத்து 943 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 44 ஆயிரத்து 437 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சைக்கு பின் 5 லட்சத்து 86 ஆயிரத்து 454 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட்டுள்ளனர். ஆனாலும் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 52 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கொரானா வைரஸ் பாதிப்பு தொடர்பாகவும் மாவட்ட வளர்ச்சி பணிகள் தொடர்பாகவும் ஆய்வு செய்ய மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அந்தவகையில் தற்போது வருகிற 13-ந்தேதி முதல் 3 மாவட்டங்களுக்கு முதலமைச்சர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். வரும் 13ஆம் தேதி முதலாவதாக தூத்துக்குடி மாவட்டத்திற்கு செல்ல உள்ள முதலமைச்சர், 14ஆம் தேதி கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டத்திற்கு செல்ல உள்ளார்.