நடுக்கடலில் சிக்கி தவித்த அகதிகளை மீட்ட கடலோர காவல் படையினர்
By: Nagaraj Tue, 14 Mar 2023 11:10:14 PM
ரோம்: இத்தாலி கடலோர காவல் படையினர் நடுக்கடலில் படகுகளில் சிக்கி அகதிகளை பத்திரமாக மீட்டனர்.
துருக்கி, எகிப்து உள்ளிட்ட நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடி பலர் சட்ட விரோத பயணம் காரணமாக ஐரோப்பிய நாடான இத்தாலிக்கு அகதிகளாக தஞ்சம் அடைகின்றனர். கடல் மார்க்கமாக ஆபத்தான முறைகளில் மேற்கொள்ளப்படும் பயணங்கள் பல நேரங்களில் விபத்து முடிந்து விடுகிறது.
அந்த வகையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இத்தாலியின் கலபிரியா பகுதியில் அகதிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அதில் 2 குழந்தைகள் உட்பட 76 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து இத்தாலி கடலோர காவல் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இத்தாலிக்கு வந்து கொண்டிருந்த சில அகதிகள் நடுக்கடலில் சிக்கித் தவித்ததாக கடலோர காவல் படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் விரைந்து சென்ற கடலோர காவல் படையினர் நடுக்கடலில் படகுகளில் சிக்கி அகதிகளை பத்திரமாக மீட்டனர்.
இதுவரை 1,000-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக கரைக்கப்படுவதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.