Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோயம்பேடு மார்க்கெட் வரும் செப்.28ம் தேதி திறப்பு; துணை முதல்வர் தகவல்

கோயம்பேடு மார்க்கெட் வரும் செப்.28ம் தேதி திறப்பு; துணை முதல்வர் தகவல்

By: Nagaraj Fri, 28 Aug 2020 10:56:10 AM

கோயம்பேடு மார்க்கெட் வரும் செப்.28ம் தேதி திறப்பு; துணை முதல்வர் தகவல்

கோயம்பேடு மார்க்கெட் வரும் செப்., 28ம் தேதி திறக்கப்படும். முதற்கட்டமாக உணவு தானிய விற்பனை அங்காடி செப்., 18ம் தேதி திறக்கப்படும் என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர.

கொரோனா பரவல் காரணமாக, கோயம்பேடு மார்க்கெட் கடந்த மே, 5ம் தேதி மூடப்பட்டது. இதற்கு மாற்றாக, திருமழிசை, மாதவரம் ஆகிய இடங்களில் தற்காலிக கடைகள் திறக்கப்பட்டன. இருப்பினும், கோயம்பேடு மார்க்கெட்டை திறக்க வேண்டும் என, வியாபாரிகள் சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

இந்நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டை மீண்டும் திறப்பது குறித்து, துணை முதல்வர் பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு செய்தார். மார்க்கெட்டில் அதிகாரிகளுடனும் ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து கோயம்பேடு மார்க்கெட், செப்., 28ம் தேதி திறக்கப்படும் என துணை முதல்வர் பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

coimbatore,report,market opening,deputy chief minister ,கோயம்பேடு, அறிக்கை, சந்தை திறப்பு, துணை முதல்வர்

மேலும், உணவு தானிய விற்பனை அங்காடி, செப்., 18ம் தேதி முதல்கட்டமாக திறக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள அங்காடிகளை ஒவ்வொரு கட்டமாக திறப்பது.

முதல்கட்டமாக உணவு தானிய மொத்த விற்பனை அங்காடியை செப்.,18 ம் தேதியும், அடுத்தகட்டமாக காய்கறி மொத்த விற்பனை அங்காடி செப்.,28 ம் தேதியும், அதன்பிறகு அடுத்தகட்டமாக பழக்கடைகள், சிறு மொத்த காய்கறி, பழக்கடைகள் மற்றும் மலர் அங்காடிகளை திறக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கோயம்பேடு மார்க்கெட்டில், முகக்கவசம், தனிநபர் இடைவெளி போன்ற அரசின் விதிமுறைகளை பின்பற்றுவது கட்டாயமாக்கப்படும். கோயம்பேடு சந்தைக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|