வெள்ளக்கரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
By: Nagaraj Sat, 22 Oct 2022 10:37:29 PM
கடலூர்: திடீர் ஆய்வு... கடலூர் அருகே வெள்ளக்கரையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் திடீரென நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
பின்னர் டாக்டர்கள் மற்றும் ஊழியர்களின் வருகை பதிவேடுகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து புறநோயாளிகள் பிரிவு, மருந்தகம், ஆய்வகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை ஆய்வு செய்த கலெக்டர், அங்கு சிகிச்சை பெற வந்த பொதுமக்களிடம் மருத்துவ சேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும் மருத்துவமனை ஆய்வகத்தில் பயன்படுத்தப்படும் கருவிகள் மற்றும்
அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள், மருந்துகளில் தேவையான மருந்துகள்
உள்ளதா என கலெக்டர் பாலசுப்ரமணியம் கேட்டறிந்தார்.
அதன்பின்,
மருத்துவமனை வளாகத்தை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்து, தூய்மையான
பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள, அங்கிருந்த ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதன்பின் ராமாபுரத்தில் உள்ள துணை சுகாதார நிலையத்திற்கு கலெக்டர் நேரில்
சென்று ஆய்வு செய்தார். அப்போது சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மீரா
மற்றும் மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.