- வீடு›
- செய்திகள்›
- டிசம்பர் மாதம் வரை கல்லூரிகள், பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை - மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் அறிவிப்பு
டிசம்பர் மாதம் வரை கல்லூரிகள், பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை - மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் அறிவிப்பு
By: Karunakaran Tue, 11 Aug 2020 2:29:09 PM
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தியாவில் கொரோனா பரவ ஆரம்பித்த உடனே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்கள் கல்வி நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பது எப்போது என்ற கேள்விகளும் எழுந்த வண்ணம் உள்ளன. பல மாநில அரசுகள் ஆன்-லைன் வகுப்புகளை தொடங்கியுள்ளன. இதுகுறித்து அதிகாரிகள் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் மத்திய கல்வித்துறை செயலாளர் அமித் கரே கலந்துகொண்டார். அப்போது பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது. இந்தியாவில் இன்னும் கொரோனா கட்டுக்குள் வரவில்லை.
இந்நிலையில் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அமித் கரே, கொரோனா வைரஸ் தொற்று இன்னும் கட்டுக்குள் வராத நிலையில பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டால் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால் டிசம்பர் மாதம் வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறக்க வாய்ப்பில்லை என்று வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.