இந்தியாவுக்கு வாருங்கள்; ரஷ்ய அதிபருக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அழைப்பு
By: Nagaraj Wed, 24 June 2020 9:39:04 PM
ரஷ்ய அதிபருக்கு அழைப்பு... ரஷ்ய அதிபர் புதின் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா வருவதற்கு பிரதமர் மோடி சார்பில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் அழைப்பு விடுத்துள்ளார்.
மூன்றுநாள் பயணமாக மாஸ்கோ சென்றுள்ள அவர், ரஷ்ய துணைப் பிரதமர் யுரி போரிசோவை சந்தித்துப் பேசினார்.
இதனைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிக்கையில், பாதுகாப்பு ஒப்பந்தங்களை
ரஷ்யா விரைந்து நிறைவேற்றும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்த ஆண்டு
இறுதிக்குள் அதிபர் புதின் இந்தியா வருவதற்கு பிரதமர் மோடி சார்பில்
அழைப்பு விடுத்ததாகவும் ராஜ்நாத்சிங் குறிப்பிட்டார்.
மாஸ்கோ
செஞ்சதுக்கத்தில் இரண்டாம் உலகப் போர் 75வது ஆண்டு நினைவாக இன்று நடைபெறும்
அணிவகுப்பில் ராஜ்நாத்சிங் பங்கேற்கிறார். இதனிடையே, சீனாவுடனான எல்லை
விவகாரத்தில் இந்தியாவுக்கு மூன்றாவது நாட்டின் உதவி ஏதும் தேவையில்லை
என்று புதின் அரசு தெரிவித்துள்ளது.