Advertisement

பொதுவுடமை இயக்க தலைவர் பி.சீனிவாச ராவ் நினைவு தினம்

By: Nagaraj Sat, 01 Oct 2022 10:55:46 AM

பொதுவுடமை இயக்க தலைவர் பி.சீனிவாச ராவ் நினைவு தினம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாவட்டக் குழு அலுவலகத்தில், விவசாயிகள், விவசாயக் கூலித் தொழிலாளிகளுக்காக போராடி, மறைந்த பொதுவுடமை இயக்கத்தின் தலைவர் பி.சீனிவாச ராவ் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.


தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் டி.ரவீந்திரன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மனோகரன், சி.ஜெயபால், என்.சிவகுரு, மாவட்டக் குழு உறுப்பினர் என்.சரவணன் மாநகர செயலாளர் எம்.வடிவேலன், மாணவர் சங்க மாவட்ட தலைவர் அர்ஜூன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் ஆம்பல் துரை.ஏசுராஜா, மாநகர குழு உறுப்பினர் வி.கரிகாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

farmers association,remembrance day,administrators,thanjavur ,விவசாயிகள் சங்கம், நினைவு தினம், நிர்வாகிகள், தஞ்சாவூர்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் நினைவு தின நிகழ்ச்சி வி.ச மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன், மாநில துணைத் தலைவர் டி.ரவீந்திரன் கலந்து கொண்டனர்.

மேலும் சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.சிவகுரு, சிபிஎம் மாநகரச் செயலாளர் வடிவேலன், வி.ச மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டப் பொருளாளர் எம்.பழனி அய்யா மற்றும் விவசாயிகள் சங்க, சிபிஎம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags :