Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விடுமுறை நாட்களில் முதுகலை ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு

விடுமுறை நாட்களில் முதுகலை ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு

By: vaithegi Tue, 09 May 2023 12:00:35 PM

விடுமுறை நாட்களில் முதுகலை ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் இயங்கி வரும் பள்ளிகளில் 2022-23 ஆம் ஆண்டுக்கான முழு ஆண்டு தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது.

இதையடுத்து ஆசிரியர்களுக்கு விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்து நேற்று 12 ஆ-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. அதை தொடர்ந்து பள்ளி கல்வி ஆணையர் புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

schooling,teachers ,பள்ளிக்கல்வி ,ஆசிரியர்கள்

எனவே அதன் படி பள்ளி அளவிலான உயர் கல்வி வழிகாட்டி மையம் சார்பில் நேற்று (மே 8) முதல் தினமும் குறைந்தது 2 முதுகலை ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டு உள்ளார்.

விடுமுறை நாட்களில் பள்ளிக்கு வரும் ஆசிரியர்களுக்கு ஈடுசெய் விடுப்பு வழங்கி உத்தரவிடப்பட்டு உ ள்ளது. மேலும் அந்த ஆசிரியர்கள் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பணிகளை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உ ள்ளது.

Tags :