Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வோடபோன் நிறுவனத்தில் இருந்து தொடர்ந்து அழைப்புகள் வருவதாக புகார்

வோடபோன் நிறுவனத்தில் இருந்து தொடர்ந்து அழைப்புகள் வருவதாக புகார்

By: Nagaraj Tue, 14 Feb 2023 04:55:48 AM

வோடபோன் நிறுவனத்தில் இருந்து தொடர்ந்து அழைப்புகள் வருவதாக புகார்

புதுடில்லி: ஜெட் ஏர்வேஸ் சிஇஓ சஞ்சீவ் கபூர், வோடபோன் சேவையிலிருந்து வெளியேற இருப்பதாக தெரிவித்ததால் வோடபோன் நிறுவனத்தில் இருந்து தனக்கு தொடர்ந்து அழைப்புகள் வருவதாகவும், அழைப்பதை நிறுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டின் சில பகுதிகளில் மோசமான கவரேஜ் மற்றும் குறைவான சர்வதேச ரோமிங் திட்டங்கள் இருப்பதால் 9 ஆண்டுகளுக்குப் பிறகு வோடபோன் சேவையிலிருந்து வெளியேற இருப்பதாக தெரிவித்தார்.

do not contact,sanjeev kapoor,vodafone,register ,தொடர்பு கொள்ளாதீர்கள், சஞ்சீவ் கபூர், வோடபோன், பதிவு

இந்நிலையில், வோடபோனில் இருந்து அழைப்புகள் வந்து கொண்டே இருந்ததால், சேவையை மாற்ற வேண்டாம் என்று தன்னை மீண்டும் மீண்டும் அழைப்பதை நிறுத்துமாறும், ஏன் மாறுகிறேன் என்பதை தங்களுக்கு தெரியப்படுத்தியதாகவும் ட்விட்டரில் பதிவிட்டார்.

அதற்கு பதிலளித்த வோடபோன், தங்கள் பிரச்சினையைத் தீர்க்க தொடர்புகொள்வதாக தெரிவித்தது. இதற்கு பதிலளித்த சஞ்சீவ் கபூர், தயவுசெய்து தன்னுடன் தொடர்பு கொள்ளாதீர்கள் என பதிவிட்டுள்ளார்.

Tags :