Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பண்டிகை காலங்களில் திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்

பண்டிகை காலங்களில் திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்

By: Nagaraj Thu, 16 Feb 2023 11:53:59 AM

பண்டிகை காலங்களில் திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்

சென்னை: கூடுதல் கட்டணம் வசூலிக்கிறாங்க... தமிழகத்தில் பண்டிகை காலங்களில் புதிய திரைப்படங்கள் வெளியாகும் போது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தேவராஜன் வழக்கு தொடர்ந்தார்.

அப்படியானால், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்களை தனிக்குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூலித்த கட்டணத்தை திரும்ப வழங்க உத்தரவிட வேண்டும் என்றார்.

action,additional collection,theater owners, ,கூடுதல் வசூல், தியேட்டர் உரிமையாளர்கள், நடவடிக்கை

இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் தாக்கல் செய்த பதில் மனுவில், “கூடுதல் கட்டணம் வசூலித்ததற்காக தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் சோதனை நடத்தப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது” என்று அதற்கான பட்டியலை தாக்கல் செய்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், திரையரங்குகளை தொடர்ந்து கண்காணித்து கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Tags :
|