Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மழை பாதிப்புகள் குறித்த புகார்களை 1913 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் .. மாநகராட்சி

மழை பாதிப்புகள் குறித்த புகார்களை 1913 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் .. மாநகராட்சி

By: vaithegi Mon, 19 June 2023 1:40:48 PM

மழை பாதிப்புகள் குறித்த புகார்களை 1913 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்  ..  மாநகராட்சி

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக நேற்றிலிருந்து சென்னையில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் அதிகாலையில் இருந்து இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

இதனை அடுத்து இந்த கனமழையால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் நீர் தேங்கி வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். மழையால் மரங்கள் விழுந்து உள்ளது.

corporation,rain effects ,மாநகராட்சி,மழை பாதிப்புகள்

இந்நிலையில், சென்னையில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கியிருந்தாலோ, மரம் முறிந்திருந்தாலோ 1913 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என மாநகராட்சி அறிவித்து உள்ளது.

மேலும், குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்றம் தொடர்பான புகார்களுக்கு 044 4567 4567 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம்.

அதையடுத்து குடிநீர் வாரியத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1916-ஐ மக்கள் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்து உள்ளது.

Tags :