ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த பகுதியில் இருப்பு பாதை முழுமையாக சீரமைப்பு
By: Nagaraj Wed, 07 June 2023 08:47:58 AM
ஒடிசா: ரயில் விபத்து பகுதி சீரமைப்பு... ஒடிசாவின் பாலசோர் அருகே மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளான பகுதியில் இருப்புப் பாதை சீரமைப்புப்பணிகள் நிறைவு பெற்றன.
இதையடுத்து சென்னையில் இருந்து புறப்பட்ட கோரமாண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் 30 கிலோமீட்டர் வேகத்தில் விபத்து நடந்த பகுதியைக் கடந்து சென்றது.
ஞாயிற்றுக்கிழமை இரவு இருவழித்தடங்களும் சீரமைக்கப்பட்டதையடுத்து வந்தே பாரத் ரயில் உள்பட சுமார் 70 ரயில்கள் மீண்டும் அந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டுள்ளன.
நாட்டையே உலுக்கிய இந்த ரயில் விபத்துக்களில் காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அடையாளம் தெரியாதவர்களின் உடல் குறித்தும் அரசு அறிவித்துள்ளது. இப்படி பலவகையிலும் மக்கள் மத்தியில் இந்த ரயில் விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.