Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காஷ்மீரில் இன்று பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல்

காஷ்மீரில் இன்று பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல்

By: Karunakaran Tue, 16 June 2020 10:02:10 AM

காஷ்மீரில் இன்று பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல்

கொரோனாவிற்கு எதிராக உலகமே போராடி வரும் இந்நிலையிலும் இந்திய எல்லை பகுதியில் அத்துமீறி தாக்குதல், பயங்கரவாத தாக்குதல் போன்றவை தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்திய ராணுவமும் அதற்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை முதல் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது.

காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள துர்வங்கம் என்ற பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, இன்று காலை பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை கண்டதும் தாக்குதல் நடத்தினர்.

kashmir,terrorist attack,security guards,shopian ,காஷ்மீர்,பயங்கரவாத தாக்குதல்,பாதுகாப்பு படையினர்,சோபியான்

பயங்கரவாதிகளின் இந்த தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். பாதுகாப்பு படையினருடன் இணைந்து காஷ்மீர் போலீசாரும் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். தற்போது வரை அங்கு எத்தனை பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனர் என்ற தகவல் வெளியாகவில்லை.

காஷ்மீர் போலீஸ் தரப்பில் வெளியிடப்பட்ட தகவலில் சோபியான் பகுதியில் என்கவுண்டர் தொடங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதல் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடைபெற்று கொண்டே வருகிறது.

Tags :