Advertisement

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் மோதல்; 45 பேர் கைது

By: Nagaraj Sun, 26 July 2020 6:46:01 PM

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் மோதல்; 45 பேர் கைது

போராட்டத்தில் மோதல்... சியாட்டலில் நிறவெறிக்கு எதிரான மிகப்பெரிய போராட்டத்தைச் சுற்றி இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பாக 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல பொலிஸாரும் காயமடைந்துள்ளனர்.

கிங் கவுண்டி சிறார் தடுப்புக்காவல் நிலையம் மற்றும் நீதிமன்ற வளாகத்திற்காக சில எதிர்ப்பாளர்கள் கட்டுமான இடத்திற்கு தீ வைத்துள்ளனர். ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களை கலைப்பதற்காக ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

seattle,protest,clash,arrest,police ,சியாட்டல், போராட்டம், மோதல், கைது, பொலிஸார்

அதன்பிரகாரம் கிழக்குப் பகுதியில் இடம்பெற்ற கலவரம் தொடர்பாக 45 பேர் கைது செய்யப்பட்டனர் என சியாட்டல் பொலிஸார் டுவிட்டரில் தெரிவித்துள்ளனர். மேலும் குறித்த பகுதியில் செங்கற்கள், பாறைகள் மோட்டார் மற்றும் பிற வெடிபொருட்களால் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கினர்.

இதன்போது 21 அதிகாரிகள் காயமடைந்தனர் என்றும் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இதனால் சியாட்டலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags :
|
|