Advertisement

எத்தியோப்பியாவில் மோதல் மீண்டும் வலுப்பெறும் நிலை

By: Nagaraj Fri, 27 Nov 2020 9:15:35 PM

எத்தியோப்பியாவில் மோதல் மீண்டும் வலுப்பெறும் நிலை

மோதல் மீண்டும் வலுப்பெற உள்ளது... கிழக்கு ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான எத்தியோப்பியாவில், அரசாங்கத்துக்கும் தன்னாட்சி பெற்ற டைக்ரே மாகாணத்திற்கும் இடையே நீண்டு வரும் மோதல் மீண்டும் வலுப்பெறவுள்ளது.

டைக்ரே மாகாண கிளர்ச்சியாளர்கள் தங்கள் ஆயுதங்களை விட்டு அமைதியான முறையில் சரணடைய 72 மணி நேர காலக்கெடு விதித்த காலக்கெடு இன்றுடன் முடிவடைந்துள்ள நிலையில், மத்திய இராணுவம் தங்கள் இறுதிகட்ட போர் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எத்தியோப்பிய பிரதமர் அபே அகமது தெரிவித்துள்ளார்.

இந்த உள்நாட்டு சண்டையில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என எதிர்வுகூறப்படுகின்ற போதிலும், டைக்ரே மாகாணம் முழுவதும் தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டு உள்ளதனால் உயிரிழப்புகள் தொடர்பான முழுமையான தகவல்கள் வெளிவரவில்லை.

ethiopia,conflict,military division,tigre province ,எத்தியோப்பியா, மோதல் நிலை, இராணுவப்பிரிவினர், டைக்ரே மாகாணம்

அத்துடன் இந்த உள்நாட்டு சண்டையால் அச்சமடைந்த ஆயிரக்கணக்கான மக்கள் பக்கத்து நாடான சூடானுக்கு அகதிகளாக சென்ற வண்ணம் உள்ளனர்.

இதனிடையே டைக்ரே கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான சண்டையில் எத்தியோப்பிய அரசாங்கம், மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாகவும், அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதாகவும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு குற்றம்சாட்டி வருகிறது. எத்தியோப்பியாவில் டைக்ரேயன்ஸ் எனப்படும் சமூகத்தை சேர்ந்தபெரும்பாலானோர் வசித்து வரும் டைக்ரே மாகாணத்தை, டைக்ரே மக்கள் விடுதலை முன்னனி கட்சியினர் ஆட்சி செய்து வருகின்றனர். இந்த பிரிவினர் 2018ஆம் ஆண்டுவரை எத்தியோப்பிய அரசாங்கத்தில் முக்கிய அங்கம் வகித்து வந்தனர்.

அமைதிக்கான நோபல் பரிசு வென்ற அபே அகமது பிரதமராக பதவியேற்றது முதல் மத்திய அரசாங்கத்துக்கும் டைக்ரே மாகாணத்தில் உள்ளவர்களுக்கும் இடையே மோதல்கள் நிலவி வந்தது. டைக்ரே மாகாணத்தை எத்தியோப்பாவில் இருந்து பிரித்து தனி நாடாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு டைக்ரே கிளர்ச்சியாளர்கள் குழுவும், டைக்ரே மக்கள் விடுதலை முன்னனி கட்சியும் செயற்பட்டு வருகின்றன.

இந்த மோதலின் உச்சமாக கடந்த நவம்பர் மாதம், டைக்ரே மாகாணத்தில் இருந்த டைக்ரேயன்ஸ் சமூகத்தின் இராணுவ பிரிவினர் எத்தியோப்பியாவின் மத்திய அரசுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கினர். இதனால் டைக்ரே மாகாணம் எத்தியோப்பிய மத்திய அரசாங்கத்தின்ன் கட்டுப்பாட்டில் இருந்து பிரிந்தது. தற்போது இரு தரப்புக்கும் இடையே கடுமையான மோதல் நிலவிவருகின்றது.

Tags :