தடுப்பு மையத்தில் குழப்பங்கள்... மின் தடையால் பாதுகாப்பு அதிகரிப்பு
By: Nagaraj Sun, 06 Nov 2022 11:47:19 AM
லண்டன்: தடுப்பு மையத்தில் குழப்பம்... பிரித்தானியாவில் சட்டவிரோத குடியேறிகள் மற்றும் தஞ்சக் கோரிக்கையாளர்களின் அதீத வருகை மற்றும் அவர்களுக்குரிய இடநெருக்கடி தொடர்ந்தும் அரசியல் சர்ச்சைகளை உருவாக்கியுள்ள நிலையில், லண்டன் ஹார்மண்ட்ஸ்வொர்த் தடுப்பு மையத்தில் குழப்பங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த மையத்தில் மின்சாரத் தடை ஏற்பட்ட பின்னர் இடம்பெற்ற சம்பவத்தின் போது, நாடு கடத்தலுக்காக தடுத்து வைக்கப்பட்ட பலர் தங்களது அறைகளை விட்டு வெளியேறி ஆயுதங்களுடன் நடமாடி குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளனர்.
மேற்கு லண்டனில் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஹார்மண்ட்ஸ்வொர்த் தடுப்பு மையத்தில ஆயுதம் ஏந்திய சில கைதிகள் மின்சாரத் தடையின் போது குழப்பங்களை ஏற்படுத்திய விடயத்தை பிரித்தானிய உள்துறை அமைச்சகம் ஒத்துக்கொண்டுள்ளது.
எனினும் இரவில் இடம்பெற்ற இந்தச் சம்பவங்களின் போது எவருக்கும் காயம்
ஏற்படவில்லையெனவும் அறிவிக்கபட்டுள்ளது. குறித்த மையத்தில் மின்சாரத் தடை ஏற்பட்டதையடுத்து அங்கிருந்தவர்கனில் பலர் தங்களுடைய அறைகளை
விட்டு வெளியேறி பல்வேறு ஆயுதங்களுடன் மையத்தின் முற்ற பகுதிக்குள்
சென்றதையடுத்து இரவு 7.45 மணியளவில் மேலதிக பாதுகாப்பு அதிகாரிகள் தடுப்பு
மையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
கைதிகள் பலாத்தாகரமாக வளாகத்தை
விட்டு வெளியேறலாம் என அஞ்சப்பட்ட நிலையில் அதிகாலை 2 மணியளவில்
குழப்பங்கள் உச்சத்தை எட்டியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மின்சார விநியோகம் திரும்பாத நிலையில் அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு காவல்துறை அதிகாரிகள் மேலதிக பாதுகாப்பை வழங்கி வருகின்றனர்.