யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபை கேள்வி கோரலின் போது குழப்பம்
By: Nagaraj Thu, 30 Mar 2023 11:13:01 AM
யாழ்ப்பாணம்: சபை கேள்வி கோரலில் குழப்பம்... யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேச சபையில் இடம்பெற்ற கேள்வி கோரலின் போது குழப்பம் ஏற்பட்டதை அடுத்து, போலீஸார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
நல்லூர் பிரதேச சபையினரால், பாவிக்கப்பட்ட பொருட்கள் நேற்று ஏலம் விடப்பட்டது.
அதன் போது ஏலம் எடுக்க வந்த சிலர் பிரதேச சபையினருடன் குழப்பத்தில் ஈடுபட்டனர். அதனை அடுத்து கோப்பாய் போலீஸாருக்கு அறிவிக்கப்பட்டு, போலீஸார் அங்கு சென்று நிலைமையை கட்டுப்படுத்தினர். இதனால் சில மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Tags :
auction |
police |
control |