Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கர்நாடக சட்டசபை தேர்தலை ஒட்டி வாக்காளர் திருவிழா விழிப்புணர்வு

கர்நாடக சட்டசபை தேர்தலை ஒட்டி வாக்காளர் திருவிழா விழிப்புணர்வு

By: Nagaraj Sun, 09 Apr 2023 3:04:41 PM

கர்நாடக சட்டசபை தேர்தலை ஒட்டி வாக்காளர் திருவிழா விழிப்புணர்வு

பெங்களூரு: வாக்காளர் திருவிழா விழிப்புணர்வு... கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி, பெங்களூரு சர்ச் ஸ்ட்ரீட்டில், பெங்களூரு மாநகராட்சி மற்றும் தேர்தல் கமிஷன் சார்பில் வாக்காளர் திருவிழா என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

இதில் தலைமை ஆணையர் துஷார் கிரிநாத் பங்கேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:- பெங்களூருவில் ஒவ்வொரு தேர்தலிலும் குறைவான வாக்குகளே பதிவாகி வருகின்றன.

இதை தேர்தல் ஆணையம் தீவிரமாக எடுத்துக்கொண்டது. பெங்களூருவில் வாக்காளர் எண்ணிக்கையை அதிகரிக்கவும், வாக்காளர் விழிப்புணர்வை அதிகரிக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அனைவரும் தவறாமல் வாக்களிப்பதை உறுதி செய்ய, குடியிருப்போர் நலச் சங்கங்களுடன் கலந்துரையாடல் நடந்து வருகிறது. பெங்களூருவில் 1.20 லட்சம் இளம் வாக்காளர்கள் உள்ளனர்.

1.20 lakh,bengaluru,chief commissioner,notification,tushar girinath,young voters, ,1.20 லட்சம், அறிவிப்பு, இளம் வாக்காளர்கள், தலைமை கமிஷனர், துஷார் கிரிநாத், பெங்களூரு

இந்த புதிய மற்றும் இளம் வாக்காளர்கள் எக்காரணம் கொண்டும் வாக்களிக்காமல் இருக்கக் கூடாது. தங்கள் உரிமையை நிலைநாட்ட வாக்களிக்க வேண்டும்.

இதுகுறித்து இளம் வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக ஐடி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் வாக்களிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நிறுவன ஊழியர்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகளுடன் தகவல் தொழில்நுட்ப ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

அந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் அதிகாரிகள், கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் தங்களது ஊழியர்களை வாக்களிக்க அறிவுறுத்தி வருகின்றனர். எனவே முதல் முறையாக வாக்களிக்க இருக்கும் ஐ.டி. ஊழியர்கள் கண்டிப்பாக வாக்களிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags :